Thursday, 24 April 2014

பாபர் மசூதி இடிக்கப்பட்டத்தில் பிஜேபி பாத்திரம் மற்றும் காங்கிரஸ் உடந்தையாய் இருந்தமைக்கு புதிய ஆதாரங்கள்


1992இல் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூத்த தலைவர்களுக்குத் தெரிந்தே, அவர்களின் ஒப்புதலோடு, இந்து மேலாதிக்கவாத அமைப்புகளால் மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டும் புதிய ஆதாரங்களை, ஓர் இந்திய புலனாய்வு செய்தித்தளமும், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமுமான கோப்ராபோஸ்ட் (Cobrapost), வழங்கி உள்ளது.

இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் கட்சி பிரதம மந்திரி பி. வி. நரசிம்ம ராவ், பாபர் மசூதி இடிக்கப்பட இருந்த சதி குறித்து அறிந்திருந்தும், அதை நடக்க அனுமதித்ததாக கோப்ராபோஸ்ட்டின் விரிவான சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. பதினாறாம் நூற்றாண்டு மசூதியான அது இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியாவில் அமைந்துள்ளது.

நூலாய்வு ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொள்ளும் கோப்ராபோஸ்டின் இணை பதிப்பாசிரியர் கே. ஆஷிஷ், பாபர் மசூதியை இடித்து விட்டு அவ்விடத்தில் புராண இந்து கடவுளான இராமருக்கு ஓர் இந்து கோயில் கட்டும் இந்து வகுப்புவாத பிரச்சார இயக்கமான, ராம் ஜன்மபூமி (இராமர் பிறப்பிட) இயக்கத்தின் 23 இடைநிலை தலைவர்களை மற்றும் உள்ளூர் தலைவர்களை நேர்காணல் செய்து, டிசம்பர் 6, 1992இல் மசூதி இடிக்கப்பட்டதைக் குறித்த அவர்களின் கருத்துக்களை இரகசியமாக பதிவு செய்தார். ஆஷிஷ் நேர்காணல் செய்தவர்களில் பலர், அந்த இடிப்பு சம்பவத்தில் பங்காற்றியமைக்காக நீதிமன்ற குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆவர் அல்லது பொலிஸ் அறிக்கைகளில் அதை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் ஆவர்.

பாபர் மசூதியை இடிக்க முன்கூட்டியே மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாக ஆஷிஷ்ஷால் நேர்காணல் செய்யப்பட்டவர்கள் விவரித்தனர், அத்தோடு இந்தியாவின் பிரதான இந்து மேலாதிக்கவாத வகுப்புவாத அமைப்புகளின் தலைவர்கள் அந்த சதியில் பங்கு வகித்திருந்ததாகவும் தெரிவித்தனர். சித்தாந்தரீதியில் BJPக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான, துணை-இராணுவ பாணியிலான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (RSS); விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில் - VHP): அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள்; மஹாராஷ்டிராவை மையமாக கொண்ட ஒரு பாசிச அமைப்பான ஷிவ் சேனா; மற்றும் முடிவுறவுள்ள தேசிய நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான BJP ஆகியவை உடந்தையாய் இருந்தவர்களில் உள்ளடங்கி உள்ளன. பிஜேபி தலைவர்கள் எல். கே. அத்வானி, உமா பாரதி, மற்றும் கல்யாண் சிங் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பலர் இந்திய முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றனர்.

முழு கோப்ராபோஸ்ட் அறிக்கையை இங்கே காணலாம்.

அந்த சம்பவத்தை நடத்த ஓய்வூபெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் ஆயிரக்கணக்கான இந்து வகுப்புவாத நடவடிக்கையாளர்களுக்கு இராணுவ பாணியிலான பயிற்சி அளித்ததாக அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. மசூதியை இடிக்க கொண்டு வரப்பட்ட பிக்காசி, மண்வெட்டிகள், உளிகள் மற்றும் பெரிய சுத்தியல்கள் "அந்த வேலையை முடிக்க" போதுமானவையாக இல்லாததால், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் டைனமைட்டுகள் மற்றும் இதர வெடிபொருட்களைப் பயன்படுத்த "பிளான் B" திட்டத்தோடு வந்திருந்தனர்.

அந்த துணைக் கண்டத்தை பிரதானமாக இந்துக்களின் இந்தியாவாக, மற்றும் வெளிவேஷத்திற்கு "மதச்சார்பற்ற" இந்தியாவாக, மற்றும் ஒரு "முஸ்லீம்" பாகிஸ்தானாக பிரித்த 1947 வகுப்புவாத பிளவுக்கு பின்னர் நடந்திருந்த, ஐயத்திற்கிடமின்றி, தெற்காசியாவின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாக அந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்திருந்தது. பல மாதங்களாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை அதிர வைத்த கலகங்களோடு ஏற்பட்டிருந்த பிரிவினைக்குப் பின்னர், இந்த இடிப்பு சம்பவமே இந்தியாவில் மிக மோசமான வகுப்புவாத இரத்த ஆறை ஏற்படுத்தி இருந்தது. 3000 க்கும் மேலான மக்கள், அதில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள், அந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தனர்.

இந்து வகுப்புவாதிகள் கூறுவதைப் போல பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஒரு "திடீர்" வன்முறை நடவடிக்கை என்பதொரு பொய் என்பது எப்போதுமே தெளிவாக உள்ளது. அதை தகர்த்த ஆயிரக் கணக்கானவர்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர். அனைத்திற்கும் மேலாக, அந்த சம்பவம் நண்பகலில் நடந்தேறியதோடு, அது படம் பிடிக்கப்பட்டது, ஆயிரக் கணக்கான பாதுகாவலர்களின் கண்களுக்கு முன்னாலேயே அது கட்டவிழ்த்துவிடப்பட்டது, உத்தரபிரதேச மாநில பிஜேபி அரசாங்கமும் சரி, காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் சரி அந்த பாதுகாவலர்களைத் தலையீடு செய்ய உத்தரவிடவில்லை.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மீதான உத்தியோகபூர்வ அரசு விசாரணை, அதாவது லிபெர்ஹன் கமிஷன் (Liberhan Commission), மிகக் கால தாமதமாக அதன் இறுதி அறிக்கையை 2009இல் சமர்ப்பித்த போது, அந்த அறிக்கை, “அந்நடவடிக்கை பெரும் கடினமான தயாரிப்போடும், முன்கூட்டிய திட்டமிடலோடும் நடத்தப்பட்டிருந்தன எனும் முடிவுக்கு இட்டு செல்லும் வகையில் ஆதாரங்கள் ஆணித்தரமாக உள்ளன," என்று முடித்திருந்தது.

இருந்தபோதினும், கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தியிருப்பது இன்னும் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பாத்திரம் குறித்த விபரங்கள் அளித்தமை உட்பட, அந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததை அதில் பங்குபற்றிய இத்தனை முக்கிய நபர்கள் இதற்கு முன்னர் இவ்விதத்தில் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. மேலும் வெவ்வேறு இந்து வகுப்புவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள், அது பாபர் மசூதி மீது தாக்குதல் நடத்துவதை நேரடியாக ஒழுங்கமைத்தவர்களாகட்டும், அல்லது தூண்டிவிட்டவர்கள் மற்றும் உடந்தையாய் இருந்தவர்களாகட்டும், அவர்கள் வகித்த பாத்திரங்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யவும் அவர்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இந்தியாவின் பொலிஸ், நீதித்துறை மற்றும் அரசாங்க அணுகுமுறையோ பாபர் மசூதி இடிப்பை கடந்த இரண்டு தசாப்தங்களாக கையாண்டு வந்ததோடு, அந்த அமைப்புகள், கோப்ராபோஸ்ட் அறிக்கையை முன்னுக்குப் பின் முரணானதென்று உதறித் தள்ளியுள்ளன. லிபெர்ஹன் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் கூட எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திராத காங்கிரஸ் கட்சி தலைமையிலான UPA கூட்டணி அரசாங்கம், சமீபத்திய வெளியீடுகளை ஒரு மரணகதியிலான மவுனத்தோடு வரவேற்றது, அதேவேளையில் இந்தியாவின் முதன்மை அரசு புலனாய்வு முகமையான CBI (மத்திய புலனாய்வு அமைப்பு), அதில் "எந்தவொரு ஆதாரபூர்வ மதிப்பும்" இல்லை என கூறி உடனடியாக உதறித் தள்ளியது.

வகுப்புவாத மற்றும் மூடநம்பிக்கைத்தனமான ராம் ஜன்மபூமி இயக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த BJPக்கு இது தெய்வாதீனமாக இருக்கும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை நிறைந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஜூன் 1991இல் முதல்முறையாக பதவிக்கு வர அந்த இயக்கத்தை BJP பயன்படுத்தியது. அதற்கு முந்தைய ஆண்டு, பிஜேபி தேசிய தலைவர் எல். கே. அத்வானி, ராம் ஜன்மபூமி இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, இந்தியாவின் இந்து குணாம்சத்தை எடுத்துக்காட்ட முன்னோடியான பிரச்சாரமென்று கூறி, இந்தியா முழுவதிலும் ஒரு வாரகால ரத யாத்திரை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோப்ராபோஸ்ட் செய்தியின்படி, அந்த மசூதி இடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே VHP மற்றும் சிவசேனாவினால் இரகசியமாக அந்த இடிப்பு குழுக்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நடவடிக்கை நடந்தேறுவதற்கு சற்று முன்னதாக, அயோத்தியாவில் அத்வானி மற்றும் ஏனைய மூத்த பிஜேபி தலைவர்கள் பங்குபெற்ற ஒரு பெரிய கூட்டத்திலேயே அந்த விபரங்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.

இந்த இடிப்பு சம்பவத்தை நடத்திய கரசேவகர்களுக்கு (சுய ஆர்வலர்கள்) பயிற்சியளிப்பதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும் ஏனைய பிஜேபி குத்தகைதாரர்கள் நேரடியாக பங்குபெறவில்லை என்றபோதினும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுவதில் பங்கெடுக்க பல கரசேவகர்கள் ஒரு மதவாத உறுதிமொழி எடுத்தபோது அவர்கள் அங்கே இருந்தனர்.

பாபர் மசூதியை இடிப்பதற்கான முடிவு பல்வேறு உயர்மட்ட இரகசிய கூட்டங்களினூடாக எடுக்கப்பட்டிருந்தது. VHP தலைவர் அசோக் சிங்ஹாலும், மற்றொரு RSS தலைவரும் மற்றும் அத்வானி, உமா பாரதி மற்றும் வினேய் கதியார் உட்பட மூத்த பிஜேபி தலைவர்களும் உட்பட RSS, VHP மற்றும் பஜ்ரங் தளம் தலைவர்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்.

சிவ சேனா நவம்பர் 1992இல் வடக்கு ஆவென்யூவில் அதன் சொந்த இரகசிய கூட்டத்தை நடத்தியது, அதில் ஜய் பகவான் கோயல் மற்றும் மொரேஷ்வர் சேவ் உட்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவ சேனாவின் உயர் தலைவரான மறைந்த பால் தாக்கரே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றபோதினும், இடிப்பதற்கான திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் விவகாரங்களை அவர் மிக நெருக்கமாக மேற்பார்வையிட்டு வந்தார்.

உத்தர பிரதேச பிஜேபி முதல் மந்திரி கல்யாண் சிங்கும், காங்கிரஸ் பிரதம மந்திரி ராவும் பாபர் மசூதி மீதான தாக்குதல் குறித்து முன்கூட்டிய அறிந்திருந்தார்கள் என்பதோடு அது நிகழ அவர்கள் அனுமதித்தார்கள் என்ற உண்மையின் மீது கூடுதல் ஆதாரங்களையும் கோப்ராபோஸ்ட் நேர்காணல்கள் வழங்குகின்றன. உத்தர பிரதேச மாநில அரசாங்கம் பாபர் மசூதியைப் பாதுகாக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறும் விதத்தில், கல்யாண் சிங் மாநில பாதுகாப்பு படைகளை ஒதுங்கி இருக்க உத்தரவிட்டார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திடம் தலையீடு செய்ய போதுமான காரணங்கள் இருந்தும், இந்து மேலாதிக்கவாதிகள் அவர்களின் இடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனுமதித்தது.

மதசார்பற்ற இந்தியாவின் பாதுகாவலனாகவும், பாதுகாப்பு அரணாகவும் காங்கிரஸ் காட்டிக் கொள்கின்ற அதேவேளையில், இந்து வகுப்புவாதத்தை முற்றிலுமாக ஊக்குவிப்பதிலும் மற்றும் அதற்கு உடந்தையாய் இருப்பதிலும், 1947இல் துணைகண்டத்தின் இரத்தந்தோய்ந்த வகுப்புவாத பிரிவினையில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளோடு ஒத்துழைத்ததில் அது வகித்த பாத்திரம் முதற்கொண்டு, உண்மையில் அது ஒரு நீண்டகால வரலாறைக் கொண்டுள்ளது.

1980களில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இந்து வலதிற்கு விட்டுக்கொடுப்புகளை அளித்தது, அதுவரையில் அவை ஒரு வரம்பிற்குட்பட்ட சக்தியாகவே இருந்தன. 1949இல் இந்து மேலாதிக்கவாதிகள் மசூதிக்குள் திருட்டத்தனமாக கொண்டு போய் வைக்கப்பட்டிருந்த இந்து கடவுளான இராமரின் சிலையை இந்து அடிப்படைவாதிகள் வணங்க மற்றும் அந்த கோயிலுக்குள் நுழைய அவர்களை அனுமதிக்கும் வகையில், 1985இல் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி பாபர் மசூதிக்கு இடப்பட்டிருந்த பூட்டுக்களை நீக்குமாறு உத்தரவிட்டதும் இதில் உள்ளடங்கும்.

குறிப்பாக தேசிய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார சமயத்தில் கோப்ராபோஸ்டின் வெளியீடுகள் வந்திருப்பதால், அவை BJPஐ ஆத்திரமூட்டி உள்ளன.

மூத்த பிஜேபி தலைவர் ரவி சங்கர் பிரஷாத், “அது கோப்ராபோஸ்ட் அல்ல, அது காங்கிரஸ் போஸ்ட்," என்றார். தேர்தல் விரோதிகளால் தேர்தல் ஆதாயங்களுக்காக "ஊக்குவிக்கப்பட்ட" நயவஞ்சக நடவடிக்கை என்று அவர் அதை குற்றஞ்சாட்டினார்.

பிஜேபி அதன் தேர்தல் அறிக்கையில், “அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவும் வகையில் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் அனைத்து வாய்ப்புகளையும் காண" வாக்குறுதி அளித்ததன் மூலமாக, இராமர் கோயில் கட்டும் அக்கட்சியின் வகுப்புவாத பிரச்சாரத்தை அது மீண்டும் முன் கொண்டு வந்துள்ளது.

BJP'இன் தேர்தல் பிரச்சாரம் குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான "இந்துவாத இரும்புமனிதரும்", கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளருமான நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளைத் தூண்டிய முக்கிய தூண்டுதாரியான மோடி போன்ற ஒரு முரட்டு இந்து வகுப்புவாதி, இந்திய அரசியலின் மகுடத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய மற்றும் மேற்கத்திய மேற்தட்டு எதை "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று துதிபாடுகிறதோ அங்கே நிலவும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் உண்மையான நிலையை அடுக்கடுக்காக பேசுகிறது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:


By Deepal Jayasekera 
18 April 2014

Thursday, 17 April 2014

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் "மதசார்பற்ற," “மக்கள்-சார்பு" மூன்றாம் முன்னணி என்ற மோசடியை ஊக்குவிக்கின்றனர்

இந்தியாவின் ஒன்பது கட்ட பொது தேர்தலின் வாக்கெடுப்பு தொடங்க இருக்கின்ற நிலையில்இந்தியாவின் ஸ்ராலினிச நாடாளுமன்ற இரட்டை கட்சிகளான சிபிஎம் [இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் சிபிஐ [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி], பல்வேறு வலதுசாரி பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகள் உள்ளடங்கிய ஒரு மூன்றாம் முன்னணியை உருவாக்க அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி உள்ளன.
கடந்த வாரம் சிபிஎம் அரசியற்குழு அங்கத்தவர் சீதாராம் யெச்சூரி, "காங்கிரஸ்-அல்லாதபிஜேபி-அல்லாத யாருடனும் நாங்கள் இணையத் தயாராக உள்ளோம்என்று அறிவித்தார்இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியுடன் (பிஜேபிமுன்னர் கூட்டணி வைத்திருந்த அஇஅதிமுக,ஒருங்கிணைந்த ஜனதா தளம்பிஜூ ஜனதா தளம் (BJP) ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களையும் தான் அப்போது யெச்சூரி ஒரு முக்கிய கூட்டாளிகளாக அடையாளம் கண்டார்இப்போது அவை வலதுசாரி மாநில அரசாங்கங்களுக்கு தலைமை வகித்து வருகின்றன.
ஸ்ராலினிஸ்டுகளின் வருங்கால கூட்டணி பங்காளிகளாக எதிர்பார்க்கப்படுபவர்கள் பெரும்பாலும் அவர்களின் நிலையற்ற நிலைப்பாட்டினால் ஏளனமாக புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றனர்அவர்கள்,இந்தியாவின் தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உடனோ அல்லது/மற்றும் வரவிருக்கும் தேர்தலில் முன்னணியில் உள்ள பிஜேபி உடனோதேர்தலுக்குப் பின்னர் பேரம்பேசுவதற்காக அவர்கள் தமது நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறிருந்த போதினும்தேர்தல் அட்டவணையின்படி மே மாத மத்தியில் வரவிருக்கின்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மூன்றாம் முன்னணி அமையுமென்றும்அது காங்கிரஸ் மற்றும் பிஜேபி-தலைமையிலான தேர்தல் கூட்டணிக்குப் போட்டியாக ஒரு "மதசார்பற்ற", “ஜனநாயக," “மக்கள்நலமாற்று அரசாங்கத்தை அமைக்குமென சிபிஎம் மற்றும் சிபிஐ வலியுறுத்தி வருகின்றன.
இதுவொரு வெட்கக்கேடான மோசடியாகும்ஸ்ராலினிசஸ்டுகளின் கூட்டாளிகளாக ஆக இருப்பவர்கள்பிற்போக்குதனமான இனவாத-மொழிவாதவகுப்புவாத மற்றும் ஜாதிய முறையீடுகள் செய்பவர்கள்,உண்மையில் அவர்கள் அவற்றையே அடித்தளமாக கொண்டிருக்கின்றனர்.நாளொன்றுக்கு டாலருக்கும் குறைந்த வருவாயில் உயிர் வாழ போராடும் மொத்த மக்கள்தொகையின் மூன்று கால் பங்கு மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் சமூகரீதியில் மேலதிக வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையைக் கிளறி விட்டிருக்கிற "சந்தை-சார்பு", "முதலீடு-சார்புகொள்கைகளை அந்த கட்சிகள் அனைத்தும் அவர்களோடு ஸ்ராலினிஸ்டுகளையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் — நடைமுறைப்படுத்தி உள்ளன.
சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டும் "நிலப்பிரபுத்துவ-ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனத்தைஎதிர்க்கிறோம் என்றும்மிக சமீபத்தில் வகுப்புவாதBJPஐ எதிர்க்கிறோம் என்ற பெயரிலும்தொழிலாளர் வர்க்கத்தை திட்டமிட்டு காங்கிரஸிற்கோ அல்லது ஏனைய முதலாளித்துவ கட்சிகளுக்கோ அடிபணிய செய்வதில்பல தசாப்தங்களாக,முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய தூண்களாக சேவை செய்துள்ளன.
இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிஉலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவுகூலி உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றும் அதன் உந்துதலை முன்னெடுத்துள்ளதோடுஅதை ஸ்ராலினிஸ்டுகளின் ஒத்துழைப்போடு செய்தும் உள்ளதுஅரசாங்கத்தின் வழிநடத்தலில் இருந்து திசைமாற்றி தனியார்மயமாக்கல்,கட்டுப்பாடுகளை தளர்த்தல்சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி செல்லவும் மற்றும் அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் இந்தியாவை முழுமையாக ஒருங்கிணைக்க இந்திய முதலாளித்துவத்தின் மைய நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்திய நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, 1990களின் தொடக்கத்தில் சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி முட்டு கொடுத்தன.
2004 தேர்தல்களுக்குப் பின்னர்இதே சிபிஎம் தான் காங்கிரஸ் தலைமையிலான UPAக்குள் பல்வேறு பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்தது. UPAஇன் பகட்டான "குறைந்தபட்ச பொதுத்திட்டம்," (Common Minimum Programme) என்பதை எழுதியதும் அதில் உள்ளடங்கும்.அத்திட்டம் இந்தியாவின் "தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் தேவைகளுக்கேற்ப நவ-தாராளவாத மறுசீரமைப்பு செய்ய முடியுமென்று,அதாவது "மனிதாபிமானத்துடனான சீர்திருத்தம்செய்ய முடியுமென,பொய்யுரைத்ததுஅதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்குஸ்ராலினிஸ்டுகள் அவர்களின் நாடாளுமன்ற பெரும்பான்மையோடு UPAக்கு ஆதரவளித்ததோடுஅந்த கூட்டிணி அரசாங்கம் ஒரு பெரு வியாபாரம் சார்ந்த சமூக-பொருளாதார திட்டத்தை மற்றும் அதற்கு முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்திலிருந்து சற்றே வேறுபட்ட ஒரு அமெரிக்க சார்பிலான வெளியுறவு கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்த போதும் கூடஅது பதவியில் நிலைத்திருக்க வாக்களித்தது.
இறுதியாகஜூலை 2008இல்இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக மற்றும் அதன்மூலமாக இந்திய முதலாளித்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டணியை"ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் ஸ்ராலினிஸ்டுகளை அரசாங்கத்திலிருந்து முடிவாக வெளியேற்ற முடிவு செய்தது.
ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் முன்னணி உபாயமானதுஉலக பொருளாதார நெருக்கடி இந்திய முதலாளித்துவத்தின் "எழுச்சியை"காலை வாரி விட்டிருக்கும் நிலைமைகளின் கீழ் மற்றும் வர்க்க போராட்டம் வேகமாக தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ்,அரசியல்ரீதியாக தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டதாகும்.
பொதுவாக தசாப்த-கால பழமையான காங்கிரஸ் தலைமையிலான UPAஅரசாங்கம்விலை உயர்வுகள்நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொதுச் சொத்துக்களை பெரு வியாபாரங்களுக்கு அன்பளிப்பாக வாரி கொடுத்தமை ஆகியவற்றோடு அடையாளம் காணப்படுகிறது.
இதற்கிடையில்பெருநிறுவன இந்தியாவோ குஜராத் முதல் மந்திரியும் சுய-பாணியிலான "இந்துத்துவ பலமானமனிதன்நரேந்திர மோடி,பிற்போக்குத்தனமான பெரும் "சந்தை-சார்முறைமைகளை மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்போடுஅவர் தலைமையிலான BJPக்கு பின்னால் பெரிதும் தொங்கி கொண்டிருக்கிறது.அந்த முறைமைகளில்எண்ணெய் மற்றும் ஏனைய விலை மானியங்களை நீக்குதல்வேலைநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கான கட்டுப்பாடுகளைக் குறைத்தல்பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தேசியளவிலான வரிவிதிப்புஒட்டுமொத்த விற்பனையைத் தனியார்மயமாக்கல் மற்றும் அன்னிய முதலீட்டின் மீது எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் நீக்குதல் ஆகியவையும் உள்ளடங்கும்.
முதலாளித்துவம் உத்வேகங்களோடு மோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதோடுபிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு அது திரும்பி வருகின்ற நிலைமைகளின் கீழ்இந்திய முதலாளித்துவத்தின் சிறியபிராந்திய கட்சிகளை உள்ளடக்கிய "பிஜேபி-அல்லாத," “காங்கிரஸ்-அல்லாதஒரு நாடாளுமன்ற அணி என்ற அவர்களின் பிரச்சாரத்தோடுஸ்ராலினிஸ்டுகள் அரசியல்ரீதியாக தொழிலாளர் வர்க்கத்தை மூச்சடைக்க வைக்க முனைந்து வருகின்றன.ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டாளிகளாக ஆக இருப்பவர்கள் அந்த இரண்டு"தேசிய கட்சிகளைப்போன்றே பெரு வியாபாரத்தின் சேவர்களாக தங்களை அர்பணித்துள்ளவை ஆகும் அல்லது அதனதன் பிராந்தியரீதியிலான முதலாளித்துவ கன்னைகளின் பொருளாதார நலன்களைக் கணக்கிட்டு அவை காங்கிரஸ் உடனோ அல்லது பிஜேபி உடனோ ஓர் உடனடி கூட்டுக்கு செல்லும்.
இடது முன்னணியில் உள்ளடங்கியுள்ள நான்கு கட்சிகள் மற்றும் ஏழு பிராந்திய கட்சிகள் உட்பட பதினொரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, "காங்கிரஸ் மற்றும் BJPக்கு ஒரு மாற்றைஉருவாக்க உடன்பட்டுள்ளதாக,"பெப்ரவரி 25இல்சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார்.இந்த மாற்றீடு ஒரு "மக்களுக்கான முன்னேற்ற பாதைக்கு"பொறுப்பெடுத்துள்ளதாக காரத் மேற்கொண்டு அறிவித்தார்ஆனால் அந்த பதினொரு கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட அந்த சுருக்கமான அறிக்கையில், “மிக சுலபமாக காங்கிரஸ் அல்லது பிஜேபி தேர்தல் அறிக்கையிலேயே காணப்படும் சமத்துவமின்மைசமூக நீதி,விவசாயிகளின் நலன்கள்சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகள்குறித்த கவனம்செலுத்துவதாக ஒரு வாக்குறுதிக்கு அப்பாற்பட்டு அந்த நிகழ்ச்சிநிரலில் உண்மையான நோக்கம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட இல்லை.
பிரகாஷ் அறிவித்ததற்கு சில மணி நேரங்களுக்குள்அந்த "மாற்றீடு"சிதறத் தொடங்கியதுமுதலில்அசாம் கன பரிஷத் தலைவர் ஒரு பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தில் சேரும் சாத்தியக்கூறு தவிர்க்கப்படவில்லை என தெரிவித்தார்பின்னர் கையெழுத்திட்டிருந்த மற்றொரு கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP), பிஜேபி அதிகாரத்திற்கு வராமல் தடுக்க மற்றொரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை அது ஆதரிக்குமென குறிப்பிட்டு காட்டியதுஇந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி,உண்மையில்கடந்த ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் தக்க வைக்க ஒத்துழைத்துள்ளது ஜூலை 2008இல் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை மீதான வாக்கெடுப்பில் அது மிக பிரபலமாக இருந்தது.
ஒடிசா தலைமை மந்திரியும், BJD தலைவருமான நவீன் பட்நாயக்கின் கட்சி சிபிஎம்-இடது முன்னணியின் "மாற்றீடுக்குஒரு ஆதரவாளராக அறிவித்திருந்த போதினும்அவர் பெப்ரவரி 25 கூட்டத்தைத் தவிர்த்து கொண்டார்அதற்கு பின்னர் வெகு விரைவிலேயேஸ்ராலினிஸ்டுகளை பீதியடைய செய்யும் விதத்தில்பட்நாயக் அவரது கட்சி ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ள தேசிய மற்றும் ஒடிசா மாநில தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார்பட்நாயக்கின் BJD, 2009இல்பிஜேபி உடன் ஒரு தேர்தல் இட ஒதுக்கீடு சம்பந்தமான மோதலில் பதினொரு ஆண்டுகால கூட்டணியை உடைத்துக் கொண்ட பின்னர்ஏறத்தாழ உடனடியாகசிபிஎம் மற்றும் சிபிஐ உடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியது.
தமிழ்நாடு முதல் மந்திரியும்அஇஅதிமுக தலைவியுமான ஜெயலலிதா,அவரது கட்சி சிபிஐ மற்றும் சிபிஎம் உடன் தேர்தல் இட ஒதுக்கீடு செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தமை ஸ்ராலினிஸ்டுகளுக்கு இன்னும் பெரிய அடியாக இருந்ததுஸ்ராலினிஸ்டுகள் ஜெயலலிதாவை மூன்றாம் அணிக்கான பிரதம மந்திரி வேட்பாளராக்கும் சாத்தியக்கூறை ஊக்குவித்து வந்திருந்தனர்ஒரு இழிபெயர் பெற்ற வலதுசாரியான ஜெயலலிதாமாநில தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க2003இல் பாரிய சிறையடைப்பு மற்றும் வேலை நீக்கங்களைப் பயன்படுத்தினார்அத்தோடு அவர் தொடர்ந்து பிஜேபி மற்றும் அதன் பங்காளிகளின் இந்து மேலாதிக்கவாத பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்துள்ளதோடு மோடியின் தனிப்பட்ட நண்பர் என்றும் குறிப்பிடப்படுகிறார்ஜெயலலிதா மற்றும் அவரது அஇஅதிமுக உடன் விடயங்களைக் கோர்க்க முடியுமென்ற தெளிவான நம்பிக்கையில் சிபிஎம்அவர் பிஜேபி உடனோ அல்லது அதன் தேசிய ஜனநாயக கூட்டணி உடனோ தேர்தலுக்குப் பிந்தைய ஒரு உடன்பாட்டை எட்ட தயாரிப்பு செய்து வருகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரிய ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் சுமார் இரண்டு வாரங்கள் காத்திருந்தது.
அதன் மூன்றாம் முன்னணி சிதறிக் கொண்டிருக்கின்ற நிலையிலும்,ஸ்ராலினிஸ்டுகள் இந்த வெற்று கூட்டை இறுக பிடித்துக் கொண்டுஅது தேர்தலுக்குப் பின்னர் வடிவமெடுக்கும் என்று தற்போது வலியுறுத்திக் கொண்டுஅஇஅதிமுக, BJD, மற்றும் இதர கட்சிகள் "முற்போக்காக"உள்ளடக்கங்களை கொண்டிருப்பதாக தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறதுஅதேவேளையில் அந்த கட்சிகளோ பிஜேபி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நுழைய வெளிப்படையாக தயாரிப்பு செய்து வருகின்றன.
சிபிஎம் தலைவர் காரத் சென்ற வாரயிறுதியில் Hindu நாளிதழுக்கு கூறுகையில், “பெப்ரவரி 25இல் நாங்கள் என்ன அறிவித்தோம் என்றால்,காங்கிரஸ் மற்றும் BJPக்கு எதிராக ஒன்றிணைவதற்கான எங்களின் ஒருமித்த விருப்பத்தை வெளியிட்டோம்தேர்தல்களுக்குப் பின்னர்அந்த மாற்றீட்டிற்கு நாங்கள் வடிவம் அளிப்போம்," என்றார்.
சிபிஎம் அதன் கூட்டணி பங்காளிகளாக ஆகக்கூடியவர்களை ஒருங்கிணைக்க இன்னும் மேலதிகமாக வலதிற்கு நகர தயாராக இருப்பதை அடிக்கோடிடும் விதத்தில்காரத் Hinduக்கு கூறுகையில்ஒரு மூன்றாம் அணி அரசாங்கத்திற்குள் நுழைய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தயாராக இருப்பதாக தெரிவித்தார். 1996இல்,பல்வேறு பிராந்திய கட்சிகளை அடிப்படையாக கொண்டு சிபிஎம் ஒரு"ஐக்கிய முன்னணிஅரசாங்கம் ஆட்சி அமைக்க சேவையாற்றியது,ஆனால் மேற்கு வங்காள சிபிஎம் முதல் மந்திரி ஜோதி பாசுவிற்கு பிரதம மந்திரி பதவி வழங்கப்படும் என்ற போதும் கூட அந்த அரசாங்கத்திற்குள் நுழைய அது மறுத்துவிட்டதுவெளியிலிருந்து ஆதரவளித்த CPMஇன் ஆதரவோடுசில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் இந்திய முதலாளிகளின் நவ-தாராளவாத சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பின்தொடர்ந்ததோடுஅதற்கடுத்த தேர்தல்களில் பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாதை அமைத்து கொடுத்தது.
அவர்களின் மூன்றாம் அணி மோசடிக்கு அழுத்தம் அளித்து வருகின்றன அதேவேளையில்ஸ்ராலினிஸ்டுகளும் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியில் உள்ள அவர்களின் துணைக்கூட்டாளிகளும் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு மீண்டுமொருமுறை முட்டு கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதற்கு சமிக்ஞை கொடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை இடது முன்னணி ஆதரிக்கக்கூடும் என்பதை விலக்கி வைக்க முடியாதுஆனால் "2004இல் ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டால் மட்டுமே அவ்வாறு நடக்கும் ... அப்போது வகுப்புவாத BJPஐ தடுப்பதற்காக காங்கிரஸ் தரப்பிற்கு செல்ல வேண்டி இருந்தது," என்று கடந்த மாதம் சிபிஎம் அரசியல்குழு அங்கத்தவரும்முன்னாள் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.
விரைவிலேயே ஒரு தனி மாநிலமாக ஆக உள்ள ஆந்திர பிரதேசத்தின் ஒரு பகுதியான தெலுங்கானாவின் சட்டமன்ற மற்றும் மக்களவை (தேசிய நாடாளுமன்றதேர்தல்களில் சிபிஐஅதன் பங்கிற்குஇங்கு இது"தனிச்சிறப்பான ஒரு விடயம்என்று கூறிகாங்கிரஸூடன் ஒரு தேர்தல் கூட்டணி உருவாக்கி வைத்துள்ளது.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP) கேரள காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்காககடந்த மாதம் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிலிருந்து வெளியேறியதுதேசிய தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தைத் தக்க வைக்கும் காங்கிரஸின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் பட்சத்திலேயே கேரள மாநில அரசாங்கத்திற்குள் RSPஐ சேர்த்துக் கொள்வதை காங்கிரஸ் நிபந்தனையாக வைத்துள்ளதுஇவ்வாறிருக்கின்ற போதினும், RSP தேசியளவில் ஸ்ராலினிஸ்டுகளின் இடது முன்னணியில்அத்தோடு அவர்களின் பகட்டான காங்கிரஸ்-விரோத "ஜனநாயக மற்றும் மதசார்பற்ற மாற்றீடு"என்பதில் ஓர் அங்கத்துவ கட்சியாக தங்கி உள்ளது.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் இந்து-வகுப்புவாத அச்சுறுத்தலைத் தூண்டுகின்றனர்

By Deepal Jayasekera and Keith Jones 
5 April 2014

இந்தியாவில் கதவடைப்பு செய்யப்பட்ட டொயோட்டோ தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்துகிறது

Police attack locked out Toyota workers in India

இந்தியாவில் உள்ள டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (TKM)நிறுவனத்தின் ஏராளமான தொழிலாளர்கள் நிறுவனத்தின் மூன்று-வார கால கதவடைப்பு நடவடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தி வந்த நிலையில்சென்ற ஞாயிறுஏப்ரல் 6 அன்றுமாநில போலிசார் அவர்கள் மீது வன்முறையான தாக்குதலில் இறங்கினர். தென்மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் (முன்னதாக பெங்களூர் என்று இருந்தது) இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிடதி என்னும் இடத்தில்இந்த ஜப்பானிய நாடுகடந்த நிறுவனத்தின் இரண்டு அசெம்பிளி தொழிற்சாலைகள் இயங்குமிடத்தில்இந்த தாக்குதல் நடைபெற்றது.
போலிசார் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில்ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் சோர்ந்து போயிருந்த தொழிலாளர்களில் இரண்டு பேர்படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முற்றிலும் எந்தவித ஆத்திரமூட்டல்களும் இல்லாத நிலையிலேயே இந்தப் போலிஸ் தாக்குதல் நடைபெற்றதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள்உலக சோசலிச வலைத் தள நேர்காணலில் தெரிவித்தனர்.
ஏப்ரல் 2 அன்று தொழிற்சங்கம் தொடங்கிவைத்த உண்ணாவிரதத்தின் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தொழிலாளர் சங்கத்தின் (TKMWU) துணைத் தலைவரான சண்முக கவுடாவிடம் WSWS பேசியது.
“ஞாயிறன்று அதிகாலை சுமார் 1 மணிவாக்கில்சுமார் 40 போலிஸ்காரர்கள் திடீரென்று எங்களது உண்ணாவிரதக் கூடாரத்திற்கு வந்தனர்” என்றார் அவர். “இரண்டு போலிஸ் அதிகாரிகளின் தலைமையில் வந்த அவர்கள்நாங்கள் நான்கு நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பதால் எங்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்களையும் ஆம்புலன்ஸையும் கொண்டுவருவதற்குப் பதிலாக எங்களது நிறுவனப் பேருந்தையே அவர்கள் கொண்டு வந்திருந்தனர்! எங்களுக்கு உடனடியாக சந்தேகம் வந்து விட்டது. ஆகவே நாங்கள் அவர்களுடன் செல்ல மறுத்தோம். ஆனால் விடாப்பிடியாக இருந்த போலிஸ் நாங்கள் மரியாதையாக அவர்களுடன் வர வேண்டும் என்று வலியுறுத்தியது.” 
கவுடா தொடர்ந்து சொன்னார்: “போலிஸ் தொழிலாளர்களை நிறுவனத்தின் பேருந்துக்கு இழுத்துச் சென்று திணிக்க செய்த முயற்சியில் இரண்டு தொழிலாளர்கள் தரையில் விழுந்தனர். தொழிலாளர்கள் மீது பாய்ந்த போலிசார்அவர்களை அடித்ததோடு தங்களது பூட்ஸ் காலால் உதைக்கவும் செய்தனர். அந்த இருவரையும் அவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் உடல் பாதிப்புற்றிருந்த மற்றவர்களையும் நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது.”
சண்முக கவுடா தொடர்ந்தார்: “இதற்குள்ளாக சில தொழிலாளர்கள் மொபைல் போன் மூலமாக அக்கம்பக்க பகுதிகளில் வசிக்கும் எங்களது சக தொழிலாளர்களுக்கு தகவல் கூறினர். அத்துடன் ஊடகங்களுக்கும் அவர்கள் தகவல் கூறினர். அரை மணி நேரத்திற்குள்ளாக1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வந்துசேர்ந்து விட்டனர். அதற்குப் பின்னர் தான் போலிஸ் பேருந்தில் எங்களை திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு அவசரமாக பின்வாங்கினார்கள்.”
மாத ஊதியத்தில் சொற்பமான 4,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) அதிகரிப்பைக் கோரிய தொழிற்சங்க கோரிக்கையை நிராகரித்து டொயோட்டோ தனது ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர்களுக்கும் மார்ச் 16 அன்று கதவடைப்பு செய்து விட்டது. தனது “இறுதிச் சலுகை”யான 3,050 ரூபாய் (51 அமெரிக்க டாலர்) அதிகரிப்பை விட்டு கொஞ்சமும் அசைந்து கொடுக்கப் போவதில்லை என்று நிர்வாகம் கூறி விட்டது. (காணவும்: “இந்தியாவில் வாகனத்துறை தொழிலாளர்களுக்கு டொயோடா கதவடைப்பை அறிவிக்கிறது).”
கதவடைப்பு இரண்டாம் வாரத்தில் நுழைந்த நிலையில்தொழிலாளர்கள் எந்த வேலை மெதுவாக்க நடவடிக்கைகள்வேலைநிறுத்தங்கள் அல்லது பிற தொழிலக நடவடிக்கைகளில் இறங்க மாட்டோம் என்று வாக்குறுதியளிக்கும் ஒரு “நன்னடத்தைப் பத்திர”த்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் நிர்வாகம் கோரியது. இது தங்களை அச்சுறுத்துவதற்கும் அத்துடன் வருங்கால பலியாக்கல்கள் மற்றும் வேலைநீக்கங்களுக்கான போலிச்சாக்கை உருவாக்குவதற்குமான இன்னொரு முயற்சி என்பதை நன்கு அறிந்திருந்த தொழிலாளர்கள் கையொப்பமிட மறுத்தனர்.
இந்த நிலைமைகளின் கீழ், TKMWU இன் 10 தலைவர்கள் ஏப்ரல் 2 புதனன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கினர். தொழிற்சாலை அருகே போடப்பட்ட ஒரு தற்காலிக கூடாரத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கரம் கோர்த்தனர்.
TKMWU எந்த பெரிய இந்திய தொழிற்சங்க கூட்டமைப்புடனும் முறையாக இணைந்த ஒன்று அல்ல என்றபோதிலும் கூடஅதற்கென்று எந்த சுயாதீனமான முன்னோக்கும் இல்லை என்பதோடு அதுவும் பெரும் தொழிற்சங்க கூட்டமைப்புகள் போன்றே அதே முட்டுச்சந்து அரசியலையே ஊக்குவித்துக் கொண்டிருந்தது. தொழிற்சங்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அரசாங்கம் மற்றும் பிற ஊழலடைந்த அரசியல் கட்சிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறது. இக்கட்சிகளோ உலகளாவிய பெருநிறுவனங்களை ஈர்ப்பதற்காய் மலிவு உழைப்புக்கான ஒரு புகலிடமாக இந்தியாவைப் பராமரிப்பதற்கு முழுமையாக உறுதிபூண்டிருக்கக் கூடியவை ஆகும்.

வடஇந்திய மாநிலமான ஹரியானாவில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக நடத்திய நெடிய போராட்டத்தை,அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம்,மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கியது. நிர்வாகத்தின் ஆத்திரமூட்டலால் உண்டாகியிருந்த ஒரு மோதலில் ஒரு மேலாளரைக் கொலை செய்ததாக மோசடியானதொரு குற்றச்சாட்டினை இட்டுக்கட்டிசித்திரவதை செய்து சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்களில் 149 தொழிலாளர்கள் இன்னும் சிறையிலிருக்கிறார்கள். (காணவும்: இந்தியாமாருதி சுஜூகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கை எதிர்ப்பு போராட்டம் கண்டிக்கிறது ”).

இரண்டு ஷிப்டுகளுடன் நாளொன்றுக்கு 500 முதல் 700 வரை வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதற்கு பதிலாக இப்போது தொழிற்சாலையில் நாளொன்றுக்கு ஒரு ஷிப்டு மட்டுமே இயக்கப்பட்டு 150 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்றபோதிலும்2,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள்பயிற்சித் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை மட்டும் கொண்டு உற்பத்தியைத் தொடர்வதற்கு நிர்வாகம் முயற்சி செய்கிறது என்று தொழிற்சங்கம் கூறுகிறது. மேலும் நிர்வாகம் 30 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்திருப்பதாகவும் தொழிற்சங்கத் தலைவரான பிரசன்னா உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.  
உண்ணாவிரதப் போராட்டங்களில் பாதிப்புற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு தொழிலாளர்களை சந்திக்க WSWSசெய்தியாளர்களை தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்றனர். போலிஸ் தாக்குதலில் காயம்பட்டிருப்பது தெரிந்ததும் முதலில் அனுமதித்த மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்ததால் இரண்டாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட நேர்ந்த இன்னும் இரண்டு காயம்பட்ட தொழிலாளர்களையும் WSWS செய்தியாளர்கள் சந்தித்தனர்.
24 வயது சந்திர கீர்த்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். போலிஸ் தாக்குதலில் அவருக்கு கால் முறிந்து விட்டது. “அவர்களுக்கு [போலிஸுக்கு] இதயமே கிடையாது. நான்கு நாட்கள் சாப்பிடாமல் ரொம்ப பலவீனமாக இருந்தோம். நாங்கள் போட்டிருந்த மேடையில் தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். போலிஸ் எங்களை வலுக்கட்டாயமாய் இழுத்து தரையில் வீசியது. அவர்களுக்கு உண்மையிலேயே எங்களது ஆரோக்கியத்தின் மீதுதான் கவலை என்றால்அவர்கள் ஏன் மருத்துவர்களையும் ஆம்புலன்ஸையும் உடன் அழைத்து வரவில்லை?
சந்திர கீர்த்தியையும்போலிஸ் தாக்குதலில் கழுத்து மோசமாகக் காயமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இன்னொரு தொழிலாளியான புனித்தையும் காண சந்திராவின் சகாக்கள் சிலர் வந்திருந்தனர்.
தாக்குதலுக்குப் பின்னர் மற்ற தொழிற்சங்கங்கள் அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து அவர்களுக்கு ஆதரவு எதுவும் கிடைத்திருக்கிறதா என்று WSWS செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறினர்: “இதுவரைக்கும் ஒரேயொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல் கட்சியோ கூட இந்த முகாந்திரமற்ற போலிஸ் தாக்குதலைக் கண்டித்திருப்பதாய் தெரியவில்லை”.  
தொழிற்சாலை வாயிலில் இருந்த சில டொயோட்டோ தொழிற்சாலைத் தொழிலாளர்களுடனும் WSWS பேசியது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தில் உள்ள தமது தோழர்களுக்கு ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிப்பதற்கு அவர்கள் மிக ஆர்வம் காட்டினர். 
“நாங்கள் MSWU பிரதிநிதிகளை அழைத்திருக்கிறோம் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக 300,000 ரூபாய் கொடையளித்திருக்கிறோம். இதற்கென எங்கள் தொழிற்சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினருமே எந்தவித தயக்கமும் இல்லாமல் நிதியளித்தார்கள். இது தவிர,டொயோட்டோவின் சப்ளையர் தொழிற்சாலைகளில் இருக்கும் தொழிலாளர்களும் கூடுதலாக 100,000 ரூபாய் நன்கொடை அளித்தனர்.”
தொழிலாளர்கள் தொடர்ந்து கூறினர்: ”இந்த தொழிற்சாலைப் பகுதியில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டுவதற்காக இப்போது டொயோட்டோ துணைநிறுவனங்களது தொழிலாளர்கள் கூட்டமைப்பையும் (Toyota Ancillary Workers Federation) இப்போது உருவாக்கியிருக்கிறோம். 13 சப்ளையர் நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் பெங்களூரு நகரில் பிப்ரவரி 28 அன்று ஒரு மாபெரும் பேரணியை நடத்தினோம்.”
டொயோட்டோ நிர்வாகத்தின் ஆத்திரமூட்டுகின்ற நடத்தையை விவரித்து அவர்கள் நிறைவு செய்தனர். “கதவடைப்புக்கு முன்பாக தொழிலாளர்களை சீண்டுவதற்காக நிர்வாகம் திட்டமிட்டு முயற்சிகள் செய்தது. ஜனவரி முதலாகவேகாலத்தை “தவறவிட்டதற்காக” நிறுவனம் தொழிலாளர்களை தண்டிக்கத் தொடங்கியது. ஒரு தொழிலாளி ஓய்வறைக்குச் சென்று விட்டு ஒரு சில நிமிடங்கள் தாமதமாய் திரும்பி வந்தாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.”
”சென்ற ஆண்டில் ஊதிய உயர்வு இல்லை. பொதுவாக எங்களுக்கு வருடா வருடம் ஊதிய அதிகரிப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. எங்களது ஊதியக் கோரிக்கையுடன் சேர்த்து பாதுகாப்பு மேம்பாடுகள் விடயத்திலான எங்களது கோரிக்கைகளையும் நிர்வாகம் தொந்தரவாய் கருதியிருக்க வேண்டும். கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக நாங்கள் ஏராளமான பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறோம்நிர்வாகம் முற்றுமுதலாய் அதற்கு அலட்சியம் காட்டி வந்ததோடு அந்தக் கோரிக்கைகளுக்கு அதீத குரோதமாகவும் நடந்து கொண்டது. இதன் விளைவாக உற்பத்தியிடத்தில் பல தொழிலாளர்களும் காயம்பட்டிருக்கிறார்கள்.”
வாகனத் தயாரிப்பு தொழிலாளர்கள் வன்முறையாக ஒடுக்கப்படுவதானது இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு சுயாதீனமான அரசியல் மூலோபாயம் அவசியமாயிருப்பதை முன்நிறுத்துகிறது. டொயோட்டோ நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அதன் அனைத்து வாகனத் தயாரிப்பையும் திட்டமிட்டு மூடுவது உட்பட தொழிலாளர்கள் மீது ஒரு உலகளாவிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. வட அமெரிக்காவில் மிருகத்தனமான சம்பள வெட்டுகளையும்ஐரோப்பாவில் தொழிற்சாலை மூடல்கள் மற்றும் பாரிய ஆட்குறைப்புகளையும்சீனா மற்றும் இந்தியாவில் மிருகத்தனமான சுரண்டலையும் விளைவித்திருக்கும் உலகளாவிய வாகனத் தயாரிப்பு பெருநிறுவனங்களது சர்வதேச மறுசீரமைப்பு நிகழ்முறையின் பகுதியாக இது இருக்கிறது.  
ஸ்ராலினிச-செல்வாக்குடைய தொழிற்சங்கங்களது தேசியவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு வேலைத்திட்டத்தில் இருந்து இந்தியாவின் வாகனத் தயாரிப்புத்துறை தொழிலாளர்கள் தங்களை விடுவித்துக் கொண்டாக வேண்டும். இத்தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சி மற்றும் பெரு வணிகத்தின் மற்ற அரசியல் சேவகர்களுடன் கட்டிப் போடுகின்றன. வாகனத் தயாரிப்புத் துறை மற்றும் பிற பெரிய பெருநிறுவனங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது உட்படதொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த ஒரு புதிய வேலைத்திட்டம் மற்றும் தலைமையே அவசியமாக இருப்பதாகும்.
By Arun Kumar and Moses Rajkumar and Kranti Kumara 
11 April 2014
http://www.wsws.org/tamil/articles/2014/apr/140412_atta.shtml

நோக்கியா இந்திய நிறுவனத் தொழிலாளர்கள் வேலைகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்

தென்மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் நோக்கியா செல்போன் தயாரிப்புத் தொழிற்சாலை மூடப்படக் கூடிய அச்சுறுத்தலுக்கு எதிராக 4,000க்கும் அதிகமான நோக்கியா இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் மார்ச் 31 அன்று சென்னையில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சிஐடியு (இந்திய தொழிற்சங்க மையம் - CITU) உடன் இணைந்த நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் இடம்பெற்றிருந்தது.

நோக்கியா தொழிலாளர்களின் மார்ச் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்
இந்த கதவடைப்பு இந்தத் தொழிற்சாலையின் 8,000 தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது. இதில் பெருவாரியானோர் வேலை உத்தரவாதம் பற்றிய மிகக்குறைந்த ஆதாயங்களும் கூட இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். அதேபோல இந்த ஆலை மூடப்பட்டால் உணவகங்களில் வேலைசெய்பவர்கள்போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உபரிபாக விநியோக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் உள்ளிட இந்த மிகப்பெரும் தொழிற்சாலையினை சார்ந்திருக்கும் 25,000 தொழிலாளர்களையும் அது பாதிக்கும்.  
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் அநேகத் தொழிலாளர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள்அத்துடன் சுமார் அறுபது சதவீதத் தொழிலாளிகள் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற இந்தியாவில் நிலவும் வறுமையான பொருளாதார நிலைமைகளின் காரணத்தால் நகரப் பகுதிகளுக்கு இடம்பெயர நிர்ப்பந்தம் பெற்ற குடும்பங்களின் முதல் தலைமுறை தொழிலாளர்கள். நோக்கியா அவர்களுக்கு வழங்கும் ஊதியம் சொற்பமானதே - சில தொழிலாளர்கள் ஓவர்டைம் ஊதியத்தையும் சேர்த்தே 8,000 ரூபாய் (133 அமெரிக்க டாலர்) மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகின்றனர் - என்றபோதிலும் இந்த வேலைகளும் போனால் இந்த இளம் தொழிலாளர்களும் கிராமங்களில் இவர்களின் சொற்ப ஊதியங்களை நம்பியிருக்கும் இவர்களது குடும்பங்களும் நிராதரவாய் விடப்படும்.
பின்லாந்தைச் சேர்ந்த இந்த நாடுகடந்த நிறுவனத்திடம் இருந்து 700 மில்லியன் டாலர் தொகையை வரியாகச் சேகரிக்க இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்கின்ற முயற்சிகளைக் கைவிடச் சொல்லி பிளாக்மெயில் செய்வதற்காய் நோக்கியா நிர்வாகம் இந்த ஆலை மூடல் அச்சுறுத்தலை பயன்படுத்துகிறது. ஏற்றுமதிக்கெனவும் உள்நாட்டுச் சந்தைக்கெனவும் தயாரிக்கப்பட்ட செல்போன்களின் எண்ணிக்கையை சரியாகக் காட்டாமல் போலியாக வரிவிலக்குகள் கோரி நோக்கியா வரிஏய்ப்பு செய்தது என்றும் தவிரவும் கடந்த பல ஆண்டுகளாக அது அவசியமான வரி ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனையடுத்து இந்திய மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் முறையே 20 பில்லியன் ரூபாய் (333 மில்லியன் டாலர்) மற்றும் 24 பில்லியன் ரூபாய் (400 மில்லியன் டாலர்) வரிபாக்கியை செலுத்த இந்நிறுவனத்திடம் கேட்கின்றன.    
சென்ற செப்டம்பரில்நிலுவை வரித்தொகை தொடர்பாக இந்திய வரித் துறை அதிகாரிகள் இந்தியாவில் இருக்கும் நோக்கியாவின் சொத்துகளை முடக்கினர். இந்த நடவடிக்கையை நீதிமன்றத்தில் நோக்கியா சவால் செய்தது என்றபோதிலும் மார்ச் மாதத்தில் இந்திய உச்சநீதிமன்றம்,இத்தொழிற்சாலையை அமெரிக்க மென்பொருள்  பெருநிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றுவதை தடுத்து நிறுத்துகின்ற கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. நோக்கியா உலகெங்கும் இருக்கும் தனது செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் டாலர் தொகைக்கு விற்று விட்டது. நோக்கியா அதன் நடப்பு மற்றும் வருங்கால கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காய் 35 பில்லியன் ரூபாயை (583 மில்லியன் டாலர்)  பிணையாக வைப்பு செய்தால் மட்டுமே இந்த ஆலையை மைக்ரோசாப்டுக்கு மாற்ற முடியும் என உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
இந்த வரி பாக்கிகள் எல்லாம் “அபத்தமானவை” என்று கண்டனம் செய்கின்ற நோக்கியா தொழிலாளர்களின் கதியை திட்டமிட்டு நிர்க்கதியாக்கி விட்டு ஒரு பைசா கூட செலுத்தாமல் இந்தியாவை விட்டே ஒட்டுமொத்தமாக புறப்படவிருப்பதாகவும் அச்சுறுத்தியிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களின் மீது அழுத்தத்தைக் கூட்டுவதற்கான ஒரு வழி என நோக்கியா நிர்வாகம் இதனை வரவேற்றதாக சில இந்திய செய்தித்தாள்கள் கூறின.
வரி செலுத்துவதைத் தட்டிக் கழிக்கும் தனது முயற்சியில்நோக்கியா இந்தியா நிறுவன நிர்வாகம் சிஐடியு தொழிற்சங்க கூட்டமைப்பின் சேவையைப் பெற்றிருக்கிறது. இந்திய நீதிமன்றங்களில் தனது சட்டப் போராட்டங்களில் சிஐடியு தனது ஆதரவை நல்கியிருப்பதாக நிறுவனத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. “ செப்டம்பரில் நாட்டின் வரித் துறையால் எங்களது சொத்துகள் முடக்கப்பட்டதில் இருந்தே இந்திய தொழிலாளர் குழுக்களுடன் நாங்கள் நெருக்கமாக வேலைசெய்து வந்திருக்கிறோம் - வரித் துறை அதிகாரிகளுக்கு எதிரான நோக்கியாவின் சட்ட நடவடிக்கைகளில் பிரதான தொழிற்சங்கம் அதனுடன் கைகோர்க்கவும் செய்துள்ளது - இந்த சவாலான நேரத்தைக் கடந்து செல்கின்ற சமயத்தில் ஒரு திறந்த விவாதமுறையை நாங்கள் தொடர்ந்து நடத்திச் செல்வோம்.”  
நிறுவனத்தின் இந்த அறிக்கையை சிஐடியு மறுக்கவில்லை, இதன் மூலம் நிர்வாகத்திற்கு முற்றிலும் வளைந்து கொடுக்கும் ஒரு கருவியாக செயல்படும் அதன் பாத்திரத்தை உறுதி செய்கிறது.
தொழிற்பேட்டைகளில் நாடுகடந்த பெரு நிறுவனங்கள் நடத்துகின்ற மிருகத்தனமான சுரண்டலை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் எந்த முயற்சிக்கும் குரோதம் காட்டுகின்ற CITU, சாதி அடிப்படையிலான பிராந்திய அரசியல் கட்சிகளுக்கும்,நீதிமன்றங்களுக்கும்மற்றும் பிற தொழிலாள வர்க்க-விரோத சக்திகளுக்கும் விண்ணப்பம் செய்திருக்கிறது.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு விண்ணப்பம் செய்ததும் இதில் அடங்கும் - இவர் 2003 இல் மாநில அரசாங்க ஊழியர்கள் நடத்திய ஒரு போராட்டத்தை ஒடுக்குவதற்காக மிகப் பெருமளவில் கைது நடவடிக்கைகளிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் இறங்கியதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது படுபயங்கர வன்மத்தை வெளிப்படுத்தியவர்.The CITU appeal to
ஜெயலலிதாவுக்கு சிஐடியு விடுத்திருக்கும் விண்ணப்பமானதுஇப்போது ஆரம்பமாகியிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றாவது அரசியல் அணி என்பதாகக் கூறப்படுகின்ற ஒன்றை ஒட்டுப்போட்டு தைப்பதற்கான முயற்சியில் தொழிலாள வர்க்கத்தின் இந்த எதிரியுடன் சளைக்காமல் உறவாடி வந்திருக்கிற அதன் தாய் அமைப்பான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூலோபாயத்துடன் கச்சிதமாகப் பொருந்தியதாக அமைந்திருக்கிறது.   
மிகப் பிற்போக்குத்தனமான சாதி அல்லது வகுப்பு வாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை - இவற்றுக்கு இடையில் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைத் தவிர வேறெந்த பொது அம்சமும் இல்லை  - உள்ளடக்கியதாக இருக்கும் இந்த அரசியல் கூட்டணியை,பெருவணிகத்தின் ஆஸ்தான அரசியல் பிரதிநிதியாக இருந்து வந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியைச் சுற்றிய கூட்டணி மற்றும் இந்து வகுப்புவாத பாரதிய ஜனதாக் கட்சியைக் கொண்ட கூட்டணி ஆகிய இரண்டு பிரதான அரசியல் கூட்டணிக்கு ஒரு “முற்போக்கான” மாற்றாக ஸ்ராலினிச CPI (M) மோசடியான வகையில் விளம்பரம் செய்து வருகிறது.   
தொழிற்சங்கத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சௌந்தரராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த கருத்துகளில்போராடும் தொழிலாளர்களை நோக்குநிலை பிறழச் செய்ய சிஐடியு செய்கின்ற முயற்சிகளை காணக்கூடியதாய் இருந்தது. “அவர்கள் (நிர்வாகம்) தொழிற்சாலைகளை வியட்நாமிற்கும் சீனாவிற்கும் கொண்டு செல்கிறார்கள்” என்று முதலில் புகாரளித்தார்”இவ்வாறு வேலை இடம்மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த நாங்கள் அரசாங்கத்திடம் கேட்போம்” என்று பின் உறுதியளித்தார்.
தேசியவாதத்தை ஊக்குவித்தும் நாட்டில் அபூர்வமாகவே அமல்படுத்தப் பெறும் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீது நம்பிக்கை வைக்க தொழிலாளர்களை ஊக்குவித்தும் தொழிலாளர்களிடையே மேலதிக குழப்பத்தை அவர் தொடர்ந்து விதைத்தார். ”அடுத்த 2-3 நாட்களில் தொழிலாளர் நலத் துறையில் நாங்கள் புகார் தாக்கல் செய்வோம். தொழிற்சாலை சச்சரவுச் சட்டத்தின் படிஆட்குறைப்புக்கு முன்னதாகவோ அல்லது ஆலைமூடலுக்கு முன்னதாக அரசாங்கத்திடம் நிர்வாகம் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். அத்தகையை அனுமதியைத் தர வேண்டாம் என்று நாங்கள் மாநில அரசாங்கத்தை வலியுறுத்துவோம்” என்று சௌந்தரராஜன் நொண்டிச் சமாதானம் அளித்தார்.  
இத்தகைய தோற்கடிப்புவாத தந்திரங்கள் எல்லாம் தொழிலாளர் போராட்டங்கள் மீதான சிஐடியு காட்டிக்கொடுப்பின் நெடிய வரலாற்றில் பின்னிப் பிணைந்தவையே. ஒரு பக்கத்தில் பெருநகர நிர்வாகம் விதித்திருக்கும் வரிகளைக் குறைக்கச் சொல்லி நோக்கியா நிர்வாகத்துடன் சேர்ந்து வேலைசெய்யும் தொழிற்சங்கம்பின் அது கூடிவேலை செய்த அதே நிர்வாகம் ஆலையை மூடுவதாக அச்சுறுத்துவதைச் சொல்லி “வேலைகளைக் காப்பாற்றுவதற்காக” மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம் ஓடுகிறது. 
இந்திய உச்சநீதிமன்றத்தின் தடையாணையைப் பொருட்படுத்தாமல் நோக்கியா உற்பத்தி எந்திரங்களில் சிலவற்றை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று விட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருசமயத்தில் செல்போன் சந்தையில் மேலாதிக்கம் செலுத்தி ஐரோப்பிய அரசியல்வாதிகளால் “ஐரோப்பிய சூப்பர்ஸ்டார்” என்று பாராட்டப்பட்ட 150 வருடப் பழமையான நிறுவனமான நோக்கியாநிறுவனம் முகம் கொடுக்கின்ற பெரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க விளைச்சலைக் கொளுத்தும் கொள்கையை (scorched earth policy) பின்பற்றுகிறது.
கடந்த பல ஆண்டுகளில் ரோமானியாஹங்கேரிபின்லாந்துஜேர்மனி மற்றும் கனடாவில் இருக்கும் நோக்கியா தொழிற்சாலைகளில் அலை அலையாய் வேலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் தனது மொபைல் போன் உற்பத்தியின் பெரும்பகுதியை இந்தியாசீனா மற்றும் வியட்நாம் போன்ற ஆசியாவின் மலிவுற்பத்திக் களங்களுக்கு இடம் மாற்றியது. (காணவும்: நோக்கியா 10,000 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்கிறது) 
இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் அரசாங்கங்கள் பெரும் வரிச் சலுகைகளை அளித்துள்ளதோடு மலிவான விலையில் நிலங்களையும் அத்துடன் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கென மலிவு உழைப்பின் அபரிமிதமான அளவையும் கூட பரிசாக அளித்துள்ளனர். பெருநிறுவனங்கள் பரந்த சமூக நாசத்தைக் கொடுத்து விட்டு  ஒரு மலிவு உழைப்புப் புகலிடத்தில் இருந்து இன்னொன்றுக்கு எளிதாக வெளியேற இயலுகின்றதான முதலாளித்துவத்தின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மையையே நோக்கியா உதாரணம் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. இந்தியத் தொழிலாளர்கள் தேசிய அடிப்படையிலான தொழிற்சங்கங்களில் இருந்தும் அவை சேவையாற்றுகின்ற முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதும் உலகளாவிய தொலைதொடர்புத் துறை நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதும் அவசரமான அவசியமாக ஆகியிருப்பதையே இந்தப் போராட்டம் எடுத்துக்காட்டுகிறது.
By Arun Kumar and Kranti Kumara
9 April 2014
http://www.wsws.org/tamil/articles/2014/apr/140411_noki.shtml

Saturday, 5 April 2014

இந்து வலதின் அச்சுறுத்தலை அடுத்து விற்பனையிலிருந்து புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டன

இந்தியாவில் இந்து மேலாதிக்கவாதிகளின் எதிர்ப்பு மற்றும் சட்டரீதியிலான அச்சுறுதல்களை முகங்கொடுத்துஇந்துவாத புத்தகங்கள் விற்பனையிலிருந்து திரும்ப பெறப்பட்டமைஇந்திய அரசியல் ஸ்தாபகத்திற்குள் நிலவும் இந்து மேலாதிக்கவாதிகளின் அழிவார்ந்த செல்வாக்கிற்கு ஒரு சமீபத்திய சான்றாக மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது வரவிருக்கின்ற மேலதிக தாக்குதல்களுக்கான ஓர் எச்சரிக்கையாக உள்ளது.

பெப்ரவரி 11இல்பென்குவின் புக்ஸ் இந்தியா பதிப்பகம்கல்வியாளர் வென்டி டோனிகெர் (Wendy Doniger) எழுதிய The Hindus: An Alternative Historyநூலின் அனைத்து விற்கப்படாத நகல்களைத் திரும்ப பெறவும்,அழிக்கவும் சிக்ஷா பசாவோ அந்தோலன் சமிதி (கல்வி பாதுகாப்பு இயக்க குழு - SBAS) எனும் ஒரு சிறிய இந்து அதிதீவிரவாத குழுவோடு நீதிமன்றத்திற்கு வெளியிலான ஒரு உடன்பாட்டை எட்டியதுஅந்த நூல் இந்து மதத்தைத் தாக்குவதாக வாதிட்டு, SBAS அந்த நூலுக்கு எதிராக2011இல் ஒரு உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது.

பென்குவின் பின்வாங்கியதால் பலம் பெற்ற SBAS, மார்ச் 1இல்,டோனிகெரின் மற்றொரு நூலானஅலெஃப் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட On Hinduism என்பதையும் திரும்ப பெற கோரியதுஅந்த நூலின் கருத்துக்களும்முந்தையதைப் போலவேபுண்படுத்தும் விதத்தில் மற்றும் அவமதிக்கும் விதத்தில்இருப்பதாக அது குற்றஞ்சாட்டியது.நூலைத் திரும்ப பெறுவதற்கு அது அழைப்பு விடுத்திருந்தது என்ற செய்திகளை மறுத்தும்நிலைமைக்கு சரியான மறுதீர்வைமட்டுமே அது பார்த்து வருவதாக கூறியும்அலெஃப் புத்தக நிறுவனம் பல நாட்களுக்குப் பின்னர் ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்து மேலாதிக்கவாத அமைப்புகளும் மற்றும் கட்சிகளும்புத்தகங்கள்,திரைப்படங்கள் அல்லது இந்துவாதத்தை "அவமதிக்கும்", அல்லது மிக துல்லியமாகஅவர்களின் இந்துத்துவ வகுப்புவாத கோட்பாட்டுக்கு மற்றும் அது எதை அடிப்படையாக கொண்டிருக்கிறதோ அந்த மொத்த வரலாற்று திரித்தல்களுக்குக் குழிபறிக்கும் எதுவொன்றுக்கு எதிராகவும்சில காலமாக தணிக்கை செய்யும் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.

டோனிகெர் நூல்களுக்கு எதிரான சமீபத்திய பிரச்சாரமானதுஅரசியல் மற்றும் வணிக மேற்தட்டின் சக்தி வாய்ந்த பிரிவுகள் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபிபிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடியின் பக்கம் திரும்பி இருப்பதோடு பிணைந்துள்ளதுஒரு பரம வகுப்புவாதியான மோடிஇந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில்2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளை தூண்டுவதில் சம்பந்தப்பட்டிருந்தார்அந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்அப்போது அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

சூரிய கடவுளை ஒரு பாலுணர்ச்சி தூண்டுதலுக்கு உரியவராக அல்லது கற்பழிப்புக்கு உரியவராக அந்த புத்தகம் குறிப்பிடுவதை மேற்கோளிட்டு காட்டிடோனிகெரின் The Hindus நூல் இந்து கடவுள்களை அவமதிப்பதாக அந்த இந்து பேரினவாதிகள் குற்றஞ்சாட்டினர்மேலும் கடவுள் இராமரின் மனைவியான சீதாஅவரது மைத்துனர் இலட்சுமணனுடன் சிற்றின்ப வேட்கை நிறைந்த உறவு கொண்டிருந்திருக்கலாம் என்று கூறப்படும் கருத்துக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்ஒரு திருமணமான பெண் கணவனுக்கு விசுவாசமாக இருப்பதற்கு ஒரு முன்மாதிரியாகஇராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டபுராணக்கதை பாத்திரமான சீதாவை,இந்து அடிப்படைவாதத்தின் ஆதரவாளர்கள் நவீன இந்திய சமூகத்தின் நடைமுறையில் வைக்க விரும்புகின்றனர்.

மக்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு மகாத்மா காந்தி உடன்பட்டிருந்தார் என்பதன் மீதான டோனிகெரின் குறிப்புகளையும் SBAS மற்றும் அதை சுற்றியிருப்பவை எதிர்க்கின்றனபிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்து வலதுகாந்தியைக் கடுமையாக எதிர்த்தது,ஆனால் மாட்டிறைச்சி உண்ணக் கூடாதென்ற அவர்களின் அதிகார எச்சரிக்கையைக் கடந்து செல்லும் எந்தவொரு முறையீட்டையும் அவர்கள் எதிர்க்கின்றனர்பசு பாதுகாப்பைஅவர்கள் ஊக்குவிப்பதற்கான காரணம்மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லீம்கள் மீதான அவர்களின் நச்சார்ந்த வகுப்புவாத தாக்குதல்களில் அதுவொரு உட்கூறாக உள்ளது.

பல இந்திய ஊடக விமர்சகர்கள்எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், SBAS மற்றும் ஏனைய இந்து அதிதீவிரவாதிகள் எந்த வகுப்புவாத தணிக்கை நெறிமுறைகளைத் திணித்து வருகின்றனரோ அதே வழியில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்பென்குவின் போன்ற முன்னணி பதிப்பகங்கள் ஒதுங்கி போயுள்ளன.

பென்குவின் பதிப்பகத்திற்கு இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ஒரு கடிதத்தில்இதிலிருந்து நாங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?இந்துத்துவாவிற்கு ஆதரவான புத்தகங்களை மட்டும் தான் நாங்கள் எழுத வேண்டுமாஅல்லது (உங்கள் 'சமரசம்காட்டுவதைப் போல) 'பாரதத்தின்' [இந்தியாவின்புத்தக அலமாரிகளில் இருந்து அவை அகற்றப்பட்டு,அழிக்கப்படும் அபாயம் உள்ளதாபென்குவினில் பிரசுரிக்கும் எழுத்தாளர்களுக்கெனஒருவேளை அங்கே ஏதாவது எழுதுவதற்கான நெறிமுறைகள் இருக்கிறதாஅங்கே ஏதாவது ஒரு கொள்கை அறிக்கை உள்ளதா? என்று கேள்வி எழுப்புகிறார்.

பெங்களூரை மையமாக கொண்ட Alternative Law Forum என்பதில் ஒரு வழக்கறிஞரான லாரன்ஸ் லியான்ங்பென்குவின் The Hindus நூலைத் திரும்ப பெற்றமை மீது ஒரு சட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அலெஃப் பதிப்பகம் டோனிகெரின் புத்தகத்தை திரும்ப பெற்றது என்ற செய்திகளைக் குறித்து கூறுகையில்அது முற்றிலும் வெட்கக்கேடானதும்கேலிக்குரியதுமாகும்ஒரு பதிப்பகம் ஒரு நூலைத் திரும்ப பெற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்நீங்கள் பொலிஸில் புகார் பதிவு செய்ய வேண்டும்இந்நாட்டில் வாசிப்பிற்கு எதிர்காலம் இல்லை," என்றார்.

பார்த்தா சாட்டர்ஜி மற்றும் ரோமிலா தாபார் உட்பட முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கல்வியாளர்களின் ஒரு குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் மனுகருத்து சுதந்திரத்தை ஸ்தாபிப்பதற்கு முன்பிருந்ததைப் போல பலமாக தூக்கிப்பிடிப்பதை உறுதிப்படுத்தபென்குவின்The Hindusக்கு எதிரான விவகாரத்தை உயர் நீதிமன்றங்களுக்கு எடுத்துக் செல்ல வேண்டுமெனவலியுறுத்தியது.

மதசார்பற்றதுஎன்ற அதன் வாதங்களுக்கு இடையில் ஆளும் காங்கிரஸ் கட்சி இந்து வலதைக் கண்டுங்காணாதது போல் இருக்கும் நிலைமைகளின் கீழ்இந்து அதிதீவிரவாதிகளின் கரங்கள் உயர்ந்துள்ளன.இப்போதிருந்து ஒரு தசாப்தத்திற்கு அண்மித்தளவில் புது டெல்லியில் அதிகாரத்தில் இருந்துள்ள காங்கிரஸ், 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளில் மோடி அரசாங்கத்தின் பாத்திரம் மீது அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் புறநகர் அபிவிருத்தி மந்திரி ஜெய்ராம் ரமேஷ்,டோனிகெரின் புத்தகங்களை பென்குவின் திரும்ப பெற்றமையை "மிக கொடுமையானதெனமுத்திரை குத்தியதோடு, SBASஐ "தாலிபான் பாணியிலான குழு என்றும்நமது [இந்தியாவின்தாராளவாத பாரம்பரியத்தைத் திரித்துஅழிக்கிறதுஎன்றும் வர்ணித்தார்.எவ்வாறிருந்த போதினும்ஒரு வகுப்புவாத இரத்த ஆறை கட்டவிழ்த்துவிட்ட பிரிட்டிஷின் 1947 இந்திய பிரிவினைக்கு அது உடன்பட்ட போதிருந்தேகாங்கிரஸ் இந்து வலதோடு இணங்கி உள்ளது.

இந்து வலதிற்கு பாதை அமைத்து அளிப்பதில் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் மிகவும் துரோகத்தனமான பாத்திரம் வகித்துள்ளனர்பிரதான ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளானஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்(சிபிஎம்மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ), தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக இந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கு,காங்கிரஸில் இருந்து பல்வேறு பிராந்தியவாத மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகளுக்குஅடிபணிய செய்ய அயராது வேலை செய்துள்ளனவாழ்க்கை தரங்களின் பாதுகாப்புக்கான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் தடுத்ததன் மூலமாகஸ்ராலினிஸ்டுகள் உழைக்கும் மக்களின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டு இந்து வலதிற்கு கதவைத் திறந்து விட்டுள்ளனர்.

பென்குவினுக்கு எதிராக வழக்கு தொடுக்க SBASஆல் பயன்படுத்தப்பட்ட சட்டம்வகுப்புவாத அரசியல் எந்தளவிற்கு பலமாக வேரோடியுள்ளதென்பதைக் காட்டுகிறது. SBASஆல் மேற்கோளிட்டு காட்டப்படும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் ஷரத்து 295 (A),எந்தவொரு மதத்தையோ அல்லது மத நம்பிக்கையையோ அவமதித்து,எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளை தூண்டிவிட நோக்கம் கொண்ட திட்டமிட்ட மற்றும் கொடிய நடவடிக்கைகளுக்கு,சிறைத்தண்டனை அல்லது அபராத தண்டனைஅல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்," என்று குறிப்பிடுகிறது.

டோனிகெரின் நூலைத் திரும்ப பெறுவதற்கான அதன் முடிவை விவரிக்கையில்பென்குவின் கூறியதாவதுஷரத்து 295 (A) அதிகளவில் பயன்படுத்தப்படுவதானது "எந்தவொரு பதிப்பகமும்தன்னைத்தானே திட்டமிட்டு சட்டத்திற்கு வெளியே நிறுத்திக் கொள்ளாமல்கருத்து சுதந்திரத்திற்குரிய சர்வதேச தரமுறைகளைத் தூக்கி பிடித்தால் அதனை அதிகளவில் சிக்கலுக்கு உள்ளாக்கும்," என்று தெரிவித்தது.

பென்குவின் முடிவிற்கு விடையிறுப்பாகஇந்தியாவின் பலம் பொருந்திய அவமதிப்பு சட்டத்தை விமர்சித்து டோனிகெர் ஓர் அறிக்கை வெளியிட்டார்அதில் அவர்அந்த சட்டம் "எந்தவொரு இந்துவையும் காயப்படுத்தும் ஒரு நூலை பிரசுரித்தால்அது உரிமையியல் மீறல் என்பதை விட ஒரு குற்றமாக ஆக்குகிறதுஎந்தவொரு பதிப்பகத்தின் ஸ்தூலமான பாதுகாப்பையும் ஆபத்திற்குள்ளாக்கும் ஒரு சட்டம்ஒரு நூலுக்கு எதிராக என்ன அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதைக் குறித்து கவலைப்படுவதில்லை," என்று குறிப்பிட்டார்.

வகுப்புவாதத்தைத் தடுப்பதற்கு அல்லாமல்ஷரத்து 295 (A) கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை ஜனநாயக உரிமையை ஒடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறதுஇந்தியாவின் பரந்து விரிந்த அவமதிப்பு சட்டங்கள்அரசியல் மற்றும் பெருநிறுவன ஸ்தாபகத்தின் மேலிடத்தில் உள்ள ஊழல் நடைமுறைகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக ஒரு சட்ட ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜிதேந்திரா பார்கவாவின் The Descent of Air India எனும் நூலில்முன்னாள் விமான போக்குவரத்துத்துறை மந்திரியும்தற்போதைய கனரக தொழில்துறை மற்றும் பொது நிறுவனங்களுக்கான மந்திரியாக உள்ள பிரஃபூல் படேலின் பெயர் இருந்தமைக்காகஅவர் ஒரு இந்திய நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்ததற்கு விடையிறுப்பாக,ஜனவரியில்இலண்டனை மையமாக கொண்ட புளூம்ஸ்பரி பதிப்பகம் அந்நூலை சந்தையிலிருந்து திரும்ப பெறவும்அதன் நகல்களை அழிக்கவும் முடிவெடுத்தது.

By Deepal Jayasekera 
1 April 2014
http://www.wsws.org/tamil/articles/2014/apr/140302_boo.shtml