Monday, 28 June 2021

சீமானும் ஸ்டாலினும் சந்திப்பு

 May be an image of 3 people, people standing, indoor and text that says 'தமிழ் GOVERNME'

படம்; ஆனந்தவிகடன் (யூன் 4 2021)

 
 தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிகள் ஏற்படுகின்ற சூழ்நிலைகளில் அதை எதிர்ப்பதற்கு முதலாளித்துவ அரசியல்வாதிகள் வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக்கொண்டாலும் எப்போதும் ஒரு கூட்டாக இருந்துகொண்டிருப்பார்கள்.

திராவிட ஆட்சிகளாலும், ஊழல்களாலும், குடும்ப அரசியலாலும் தமிழ்நாட்டை திமுக மற்றும் அஇஅதிமுக வை கொள்ளையடித்தவர்கள் என்று கூறியவர் சீமான். தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் மத்தியில் ஒன்றுபட்ட எழுச்சிகள் எழுவதைக் கண்டு தமிழ் இன வகுப்புவாதத்தால் தமிழ் உழைக்கும் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கும் அரணாக இருந்து செயல்பட்டுவருகிறார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இயக்குவது முழுக்க முழுக்க இந்திய பெருநிறுவன முதலாளித்துவ ஆளும் தட்டுக்கள் என்பதை #தொழிலாளவர்க்கம் புரிந்துகொள்ளவேண்டும். 
 
மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, துயரங்களை தீர்ப்பதற்கு படு பிற்போக்குவாத கொள்கைகளை உணர்ச்சிமிக பேச்சைக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திய நிலையில் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட நடுத்தரவர்க்க தட்டுக்களின் ஆதரவை பெற்றிருந்தார். அதேநேரம் மக்கள் மத்தியில் இருந்த திராவிட கட்சிகளின் தோல்விகளை சுரண்டுவதற்கும் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் அவருடைய பேச்சை நம்பி, வாக்களித்தவர்களின் எண்ணங்களில் #ஸ்டாலின் #சீமான் சந்திப்பு ஒரு கனம் நாம மோசம் போயிட்டோமோ என்ற எண்ணம் வந்து போயிருக்கும். தேர்தல் பிரச்சாரத்தின்போது சசிகலாவுக்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். 
 
தொழிலாள வர்க்கம் இத்தகைய #குட்டிமுதலாளித்துவ அரசியில்வாதிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்பதை அடையாளம் கண்டு அவர்களை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் கல்வியில் பலமடைந்தவர்களாக மாறவேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்திற்கு தலைமையேற்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (#wsws.org) இந்திய பகுதியை கட்டி சோசலிசத்திற்கான போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும். 
 
இறந்துபோன முதலாளித்துவத்திற்கு ஸ்டாலின் தலைமையிலான #திமுக, அல்லது பிற முதலாளித்துவ கட்சிகள் காட்சிக்கு வருவது தொழிலாள வர்க்கத்தினை காட்டுமிராண்டித்தனமான முதலாளிகளின் சுரண்டலைப் பாதுகாப்பதற்காகத்தான் அதில் சீமான் விதிவிலக்கான அரசியலைக் கொண்டிருக்கிவில்லை.
 

கேள்வி எழவில்லையா?

 May be an image of one or more people, people standing and sky

சமூகத்தில் குறிப்பாக உழைக்கும் மக்களுக்கான நியாயமான பிரச்சனைகளின் கோரிக்கைகள் நீண்ட நெடு காலமாக இருந்துவருகின்றன. நியாயமான சம்பளம், போதிய மருத்துவ வசதி, வாழ்விடம் மற்றும் வாடகை, கல்வி வசதிகள் என குறிப்படத்தக்கவைகள் மிக முக்கியமானதாக இருக்கின்றன. பல ஆட்சிகளும் ஆட்சி மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. குறிப்பாக தொழிலாளர்களின் கட்சியாக காட்டிக்கொள்ளும் சிபிஐ மற்றும் சிபிஎம் மற்றும் மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் கட்டிவைத்திருக்கும் வேலையைத் தவிர தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவோ அல்லது தொழிலாளர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்கோ எதுவும் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது உழைக்கும் மக்கள் ஆகிய நாம் பெரு முதலாளிகளின் லாபங்களுக்காக சுரண்டப்படுவதிலிருந்து விடுபட முடியாதா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழவில்லையா?
 

டார்கெட் முடித்தாகனும்

May be an image of 8 people, people standing and people sitting

மனேஜர்களும், முதலாளிகளும் இந்த மாத டார்கெட் முடித்துவிடவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறுவனங்களில் கடுமையாக குறைவான கூலிக்கு உழைக்கின்ற தொழிலாளர்களை வெறும் இயந்திரமாகத்தான் பார்த்துகொண்டிருக்கிறார்கள். பல #தொழிலாளர்கள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதால் அவர்களை அடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த தொழிலாளர்கள்தான் தங்கள் கடின உழைப்பை செலுத்தி அவர்களின் டார்கெட்டை முடித்துக்கொடுக்கிறார்கள். தனது #உழைப்பு சக்தியை #குறைந்த #கூலிக்கு விற்கும் தொழிலாளியால் அந்த பொருளில் உரிமைகொள்ள முடியாமல் போகிறது. எந்த உழைப்பையும் செலுத்தாமல் வெறும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியும் வழங்காமல் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் ஆடம்பரமாகவும் சொகுசாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை ஆட்சியாளர்களும், காவல்துறை, நீதிமன்றம் என அனைத்தும் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. இந்த முதலாளித்துவ வர்க்க சுரண்டலிலிருந்து தொழிலாளவர்க்கம் விடுதலை பெறுவது என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படும் நனவான அரசியல், தத்துவத்தின் வளர்ச்சியில்தான் தங்கியிருக்கிறது. ஆனாலும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமான போராட்டம் உலகெங்கிலும் போல இந்தியாவிலும் வெடிக்கத்தொடங்கிவிட்டன. 

 
தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல், தத்துவ நனவு என்பது தானாக ஏற்படப்போவதில்லை. அப்படி ஏற்படாத பட்சத்தில் அதனை பிற முதலாளித்துவ கட்சிகள் அதனை சுரண்டிக்கொள்வதுடன் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு சர்வாதிகார ஆட்சியைத்தான் மேற்கொள்ளும். தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் தங்களுக்கான சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டவேண்டும். அந்த குழுக்கள் சர்வதே தொழிலாள வர்க்கத்தின் உதவியுடன் தனது போராட்டத்தை கொண்டுநடத்தும். அதற்கான முயற்சியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (wsws.org) போராடிக்கொண்டிருக்கிறது. அதில் சேர்வதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள்,. பெண்கள், மாணவர்கள் முயற்சிக்கவேண்டும்.
 
வாழ்க்கை என்பது ஒருமுறைதான். வரலாறு என்பது நமது கைகளில்தான் உள்ளது.